search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் கட்டண சலுகை"

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.
    • அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்க உள்ளது.

    பிஜ்னோர்

    ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெயில் பயணிகளுக்கு 55 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு ரூ.62 ஆயிரம் கோடி செலவிட்டது' என்று தெரிவித்தார்.

    புதிய ரெயில் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மின்சார ரெயில்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவை என்ஜின் இல்லாமல 2-வது அல்லது 3-வது பெட்டியில் இருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

    தொலைத்தொடர்பு துறையையும் வகித்து வரும் அஸ்வினி வைஷ்ணவ், அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாகவும், அடுத்த 500 நாட்களில் 5 பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    ×